tzf;fk;

Tuesday, November 30, 2010

கவலை

கவலை என்பது மனதைக் கொல்லும் ஒரு நோய்.அது அமிலம் போல மனதை மெல்ல மெல்ல அரித்துக் கொல்லும். கற்பனையில் இல்லாததை எண்ணி கவலைப்படுபவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள். "எனக்கு வேலை கிடைக்காவிட்டால்.... எனக்குத் திருமணம் நடக்காவிடால்.... என்னைக் காதலிப்பவன் என்னைக்... கல்யாணம் செய்யாமல் விட்டு விட்டால்.... எனக்குக் குழந்தை பிறக்காவிட்டால்...." இப்படி வீணான கற்பனைகள் மனதில் அலை அலையாய் எழும். இதுவே கவலைகளைக் கருக்கொள்ளச் செய்துவிடும். மன நிறைவுடன் வாழப் பழகிக் கொண்டால் வாழ்க்கை கவலை இல்லை.பிரச்சனைகளும் குறைந்து மறைந்தே போகும். "எங்கள் கைகளுக்குள்தான் எங்கள் சந்தோஷமும் கவலையும்" "கவலையற்ற இதயம் நீடித்து வாழும்" நன்றி
 
பிறந்தவுடன்
பால் கவலை.
வளர வளர
படிப்பு கவலை.
படித்து முடிந்தால்
வேலை கவலை.
வேலை கிடைத்தால்
நல்ல சம்பளம் கவலை.
சம்பளம் கூடினால்
கல்யாணம் கவலை.
கல்யாணம் முடிந்தால்
பிள்ளை கவலை.
பிள்ளை பிறந்தால்
பேர் வைக்க கவலை.
உடன் வரும்
வீடு கட்ட கவலை.
வீடு கட்டினால்
கடன் அடைக்க கவலை.
கடன் அடைத்தபின்
ஓய்வு கவலை.
ஓய்வுக்கு பின்னும்
ஓயாத கவலை.
மரணம் எப்போது
மனதின் கவலை.
எப்போதுமுண்டு
எல்லோர் மனதிலும்
இறந்தால் மீண்டும்
பிறப்போமா
என்றொரு கவலை.
பிறந்தவுடன்
பால் கவலை.
ஒரு பெண்ணை நாம் பார்த்தால்..
அவள் பார்ப்பாளா என்ற கவலை.
பார்த்துவிட்டால்..
பேசுவாளா என்ற கவலை..
பேசிவிட்டால்..
காதலிப்பாளா என்ற கவலை..
காதலும் செய்து விட்டால்..
கல்யாணம் பண்ண சம்மதிப்பாளா
என்ற கவலை..
அவள் சம்மதித்தாலும் அவள்
முன்னாள் காதலன் சம்மதிப்பானா
என்ற கவலை..
 
 

No comments:

Post a Comment